sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா கடத்தல்; 15 கிலோ பறிமுதல்

/

குட்கா கடத்தல்; 15 கிலோ பறிமுதல்

குட்கா கடத்தல்; 15 கிலோ பறிமுதல்

குட்கா கடத்தல்; 15 கிலோ பறிமுதல்


ADDED : ஜூன் 16, 2024 11:48 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு ஸ்கூட்டரில் குட்கா பொருட்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்து, 15 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் நேற்று புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தென்கோடிப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 15 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், புதுச்சேரி மாநிலம், ராமநாதபுரம் ஆஸ்பிட்டல் ரோட்டைச் சேர்ந்த காத்தவராயன், 56; என்பதும், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு குட்கா புகையிலை பொருட்கள் சப்ளை செய்ய எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

அதன் பேரில் காத்தவராயனை போலீசார் கைது செய்து, குட்கா பொருட்கள் மற்றும் ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us