/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு: விழுப்புரத்தில் பரபரப்பு
/
ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு: விழுப்புரத்தில் பரபரப்பு
ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு: விழுப்புரத்தில் பரபரப்பு
ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு: விழுப்புரத்தில் பரபரப்பு
ADDED : மே 23, 2024 10:40 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நின்றிருந்த ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம், வி.மருதுார், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி ஜெயப்பிரியா, 32; இவர், திருச்சி சாலையில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். நேற்று காலை 9:00 மணிக்கு மேல் வழக்கம் போல் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்றார்.
காலை 11:45 மணியளவில் ஸ்கூட்டரின் பின்பகுதியில் உள்ள பெட்ரோல் டேங்கிற்கு கீழ் பகுதியில், பாம்பு புகுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு நிலையத்தினர் ஷாஜகான் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடம் போராடி, 6 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.