sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கார் மீது அரசு பஸ் மோதல் சோப்பு வியாபாரி பலி

/

கார் மீது அரசு பஸ் மோதல் சோப்பு வியாபாரி பலி

கார் மீது அரசு பஸ் மோதல் சோப்பு வியாபாரி பலி

கார் மீது அரசு பஸ் மோதல் சோப்பு வியாபாரி பலி


ADDED : ஜூன் 02, 2024 04:43 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணம் அருகே ஆம்னி கார் மீது அரசு பஸ் மோதியதில் சோப்பு வியாபாரி இறந்தார்.

புதுச்சேரி, சுதானா நகரை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன்,55; சோப்பு வியாபாரி. இவர் நேற்று காலை ஆம்னி காரில் சென்று மரக்காணம் பகுதியில் சோப்பு வியாபாரம் செய்துவிட்டு, மதியம் 12:00 மணிக்கு இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரிக்கு புறப்பட்டார்.

பனிச்சமேடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற புதுச்சேரி அரசு பஸ் மோதியது. அதில், காரை ஓட்டிச் சென்ற லட்சுமிநாராயணன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்த மரக்காணம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, காரில் சிக்கி இறந்த லட்சுமி நாராயணன் உடலை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். இதனால் இ.சி.ஆரில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

எங்கே போனது மனித நேயம்

ஆம்னி கார் மீது பஸ் மோதியதில், காரில் சென்ற சோப்பு வியாபாரி இடிபாட்டில் சிக்கி இறந்தார். காரில் இருந்த சோப்புகள் சாலையில் சிதறியது. அதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள், விபத்தில் சிக்கியவரை மீட்க முன்வராமல், சாலையில் சிதறிக் கிடந்த சோப்புகளை அள்ளிச் சென்றது வேதனையை ஏற்படுத்தியது.








      Dinamalar
      Follow us