sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திராவிட கட்சிகள் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை சவுமியா அன்புமணி சாடல்

/

திராவிட கட்சிகள் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை சவுமியா அன்புமணி சாடல்

திராவிட கட்சிகள் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை சவுமியா அன்புமணி சாடல்

திராவிட கட்சிகள் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை சவுமியா அன்புமணி சாடல்


ADDED : ஜூலை 02, 2024 11:29 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : தமிழகத்தில் திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் வேலை வாய்ப்பு இல்லை என சவுமிய அன்புமணி பேசினார்.

விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணிக்கு கடைவீதியில் ஓட்டு சேகரித்த பசுமைத் தாயக தலைவி சவுமியா அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:

விக்கிரவாண்டி தொகுதியில் அதிக அளவு குடிசைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இத்தனை ஆண்டு காலம் திராவிட கட்சிகள் ஆட்சி செய்தும் குடிசைகள் கட்டடங்களாக மாறவில்லை. தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை இல்லை. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு செல்ல சரியான பஸ் மற்றும் சாலை வசதிகளும் இல்லை.

தேர்தல் நேரத்தில்தான் ஒரு வார காலத்திற்கு அமைச்சர்கள் முகாமிட்டு மக்களிடம் குறைகளை கேட்பார்கள் அதன் பிறகு அவர்கள் சென்று விடுவார்கள் குறைகள் நிறைவேறாது. தேர்தல் முடிந்த பிறகும் மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள் உங்களுடன் இருப்போம். முன்னாள் முதல்வர் ஜெ., தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு தந்தார். இதுவே மற்ற மாநிலங்களில் அதிகபட்சமாக 50 சதவீதம் தான் உள்ளது.

இதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சரியான ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லை எனக் கூறி இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும். அனைத்து கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஒரு மாதத்தில் இப்பணியை முடிக்கலாம்.

பா.ம.க., எழுச்சியை பார்த்து தி.மு.க.,வினர் மக்களுக்கு பணம் கொடுத்து கூட்டத்திற்கு வராமல் தடுக்கின்றனர். இவ்வாறு சவுமியா அன்புமணி கூறினார்.

நகர செயலாளர் சங்கர், மாவட்ட அமைப்பாளர் ராஜா, தலைவர் லட்சுமி நாராயணன், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், மாநில செயற்குழு மோகன், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், கோபாலகிருஷ்ணன், திருமாவளவன், தாமரைக்கண்ணன், கோபிநாத், கணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us