sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆடிப்பட்டத்திற்கு விதைப்பு நெல் தயார்; வானுார் வேளாண் அதிகாரி தகவல்

/

ஆடிப்பட்டத்திற்கு விதைப்பு நெல் தயார்; வானுார் வேளாண் அதிகாரி தகவல்

ஆடிப்பட்டத்திற்கு விதைப்பு நெல் தயார்; வானுார் வேளாண் அதிகாரி தகவல்

ஆடிப்பட்டத்திற்கு விதைப்பு நெல் தயார்; வானுார் வேளாண் அதிகாரி தகவல்


ADDED : ஜூலை 04, 2024 10:04 PM

Google News

ADDED : ஜூலை 04, 2024 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் தாலுகாவில் வரும் ஆடிப்பட்டத்திற்கு விதைப்பு செய்ய நெல் விதைகள் தயார் நிலையில் உள்ளதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் தெரிவித்துள்ளார்

அவரது செய்திக் குறிப்பு:

வானுார் தாலுகாவில் நேற்று முன்தினம் பரவலாக அனைத்து கிராமங்களிலும் மழை பெய்தது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் வரும் சம்பா சாகுபடி பணியை துவங்கலாம்.

சம்பா பருவத்திற்கு தேவையான நீண்ட கால நெல் ரகமான சி.ஆர்.1009 சப்-1, மத்திய கால ரகமான மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி போன்ற நெல் ரகங்கள் கிளியனுார், பரங்கினி, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

மேலும், நெல் மகசூலை அதிகரிக்கக் கூடிய இடுபொருளான சிங்க் சல்பேட், நெல் நுண்ணுாட்ட உரம், ஜிப்சம் போன்ற இதர இடுபொருள்கள் மானிய விலையில் வழங்க தயார் நிலையில் உள்ளன.

எனவே, விவசாயிகள் அனைவரும் விதைகள் மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் பெற சம்மந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us