/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி: விழுப்புரம் மாணவர்கள் தேர்வு
/
மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி: விழுப்புரம் மாணவர்கள் தேர்வு
மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி: விழுப்புரம் மாணவர்கள் தேர்வு
மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி: விழுப்புரம் மாணவர்கள் தேர்வு
ADDED : செப் 11, 2024 11:14 PM

விழுப்புரம், : திண்டுக்கல்லில் நடக்க உள்ள மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிக்கு, விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.
கடலுார் மண்டல அளவிலான (எஸ்.ஜி.எப்.ஐ) இறகுப் பந்துப் போட்டிகள் கடந்த 9ம் தேதி கரூரில் நடந்தது.
இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில், கடலுார் மண்டலம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, விழுப்புரம் சதா பேட்மிட்டன் பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் விழுப்புரம் மாணவி தில்மாவனா சிறப்பாக விளையாடி மூன்றாவது இடம் பிடித்தார்.
இதே போல், 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் கோவிந்தகிருஷ்ணன் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்தார். 17 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் சாந்தனு சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இவர்களுக்கு, பரிசுக்கோப்பை, பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
மண்டல அளவிலான போட்டியில் தேர்வான இவர்கள் அனைவரும், திண்டுக்கல்லில் விரைவில் மாநில அளவில் நடக்கவிருக்கும் (எஸ்.ஜி.எப்.ஐ) போட்டியில், கடலுார் மண்டலம் சார்பாக பங்குபெற உள்ளனர் என்று, மாவட்ட இறகுப்பந்துக் கழக செயலாளர், பயிற்சியாளர் பாபு தெரிவித்தார்.