/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழகம் மேம்பட மாநில அதிகாரம் அவசியம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
/
தமிழகம் மேம்பட மாநில அதிகாரம் அவசியம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
தமிழகம் மேம்பட மாநில அதிகாரம் அவசியம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
தமிழகம் மேம்பட மாநில அதிகாரம் அவசியம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
ADDED : மார் 27, 2024 07:35 AM
விழுப்புரம் : 'விழுப்புரம் மாவட்டம் கல்வியிலும், தனிநபர் வருவாய், பொருளாதாரத்திலும் கடைசி இடத்தில் உள்ளது' என பா.ம.க., நிறுவனர் பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த, தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
தமிழகத்தில் பல தரப்பு பிரச்னைகளுக்காக போராடி வருகிறோம். இங்குள்ள 370 சமுதாயத்துக்கும், பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் சமநிலையின்றி உள்ளனர். அனைத்து தரப்புக்கும் போராடி, சமூக நீதி பெற்று தர வேண்டும். தமிழகம் கல்வியில் வளர்ந்ததாக கூறுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கல்வியிலும், தனிநபர் வருவாய், பொருளாதாரத்திலும் கடைசி இடத்தில் உள்ளது. குடிசை அதிகமுள்ள பகுதியாகவும் இருக்கிறது. இந்த நிலை தொடரக்கூடாது. இந்த பிரச்னைகள் தீர்க்கும் வழிகளை, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.
சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆகியும், சிலர் உயர்ந்தும், சிலர் மிக தாழ்ந்த நிலையில் இருப்பது தொடர்கிறது. இதனை போக்க லோக்சபாவில் பேச வேண்டும்.
மத்தியில் காங்., ஆட்சி காலத்திலிருந்து, மாநில அதிகாரம் பறிக்கப்படுகிறது. நகராட்சிக்கான அதிகாரம் கூட மாநிலத்திற்கு இல்லை. பிறகு எப்படி கல்வி, அடிப்படை வசதிகளில் மாநிலத்தை முன்னேற்ற முடியும். இந்நிலை மாற வேண்டும். மாநில அதிகாரம், சமூகநீதி அவசியம்.
நமது கொள்கை. நாடு மேம்பட, சமநிலை சமுதாயம் அமைய வேண்டும், மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

