ADDED : மே 02, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வயிற்று வலியால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம் அடுத்த சித்தணியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன், 76; விவசாயி. இவர் சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த அவர், கடந்த 30ம் தேதி பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.