sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நீட் தேர்விற்கு தயாரான மாணவி தற்கொலை; திண்டிவனம் அருகே போலீஸ் விசாரணை

/

நீட் தேர்விற்கு தயாரான மாணவி தற்கொலை; திண்டிவனம் அருகே போலீஸ் விசாரணை

நீட் தேர்விற்கு தயாரான மாணவி தற்கொலை; திண்டிவனம் அருகே போலீஸ் விசாரணை

நீட் தேர்விற்கு தயாரான மாணவி தற்கொலை; திண்டிவனம் அருகே போலீஸ் விசாரணை


ADDED : மார் 03, 2025 06:23 AM

Google News

ADDED : மார் 03, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் மகள் இந்துமதி, 19; இவர், கடந்த 2022ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். பின், புதுச்சேரியில் தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்து கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். தேர்வில் 350 மதிப்பெண் பெற்ற நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை.

இதையடுத்து, 2வது முறையாக இந்த ஆண்டு மீண்டும் தேர்வு எழுத புதுச்சேரியில் உள்ள ஒரு கோச்சிங் சென்டரில் சேர்ந்து வீட்டிலிருந்தே படித்தார். தேர்வு எழுதுவதற்கான ஓ.பி.சி. சான்றிதழை அவரது தந்தை மற்றும் சகோதரர் நேற்று முன்தினம் வாங்கிக் கொடுத்துள்ளனர்

தேர்வு எழுதுவதற்கான ஒப்புகை சீட்டு எண்ணை அவரது தந்தை வாங்கிகொண்டு, இ-சேவை மையத்திற்கு சென்று சரி பார்த்தார். அப்போது, இந்துமதி கொடுத்த ஒப்புகை சீட்டு எண் தவறாக இருந்தது. பின், இந்துமதி வேறு ஒரு எண் கொடுத்தபோது, அந்த எண் சரியாக இருந்தது.

இந்நிலையில், மாலை வீட்டிற்கு வந்த ராமதாஸ், இந்துமதியிடம், 'ஏன் சரியான எண்ணைக் கொடுக்கவில்லை. உன்னால் அலைந்ததுதான் மிச்சம்' என கடிந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், மாலை 5:00 மணியளவில், அறையில் இந்துமதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார், இந்துமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, நீட் தேர்வு பயம் காரணமாக இந்துமதி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us