ADDED : ஆக 07, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி முதல்வர் மாதவி பொறுப்பேற்றார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி முதல்வராக இருந்த சிவக்குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரி முதல்வராக பணியாற்றி வந்த மாதவி, விழுப்புரம் அரசு கல்லுாரி முதல்வராக நியமிக்கப்பட்டு, விழுப்புரத்தில் நேற்று பொறுப்பேற்றார்.
