ADDED : ஜூலை 04, 2024 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் நேற்று மதியம் 12:30 மணியளவில், ஈச்சேரி ஏரிக்கரையில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கே கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு (எ) ஜெயக்குமார், 36; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.