/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
/
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
ADDED : ஆக 07, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் விழுப்புரத்தில் கூலி தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
விழுப்புரம் கந்தசாமி லேஅவுட் பகுதியை சேர்ந்த ரகுபதி மகன் பிரகாஷ், 39; கூலி தொழிலாளி. திருமணமாகாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை அவர் வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே, அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.