/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்கிலிருந்து மயங்கி விழுந்தவர் பரிதாப பலி
/
பைக்கிலிருந்து மயங்கி விழுந்தவர் பரிதாப பலி
ADDED : மே 26, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்கிலிருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம், பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அய்யனார்,51; நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்.இவர், நேற்று தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம், கே.கே., ரோடு பகுதியில் சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதை பார்த்த பொதுமக்கள் சிலர் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்ததை உறுதி செய்தார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.