/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டட பணியின் போது தவறி விழுந்தவர் பலி
/
கட்டட பணியின் போது தவறி விழுந்தவர் பலி
ADDED : ஆக 31, 2024 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கட்டட பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த நடுமுத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, 40; கொத்தனார். இவர், கடந்த 24ம் தேதி, கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 15 அடி உயர சாரத்தில் இருந்து தவிறி விழுந்து படுகாயமடைந்தார்.
உடன், சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.