நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகள் வெண்ணிலா, 17; இவர், விழுப்புரம் அரசு மகளிர் கல்லுாரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.