/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சண்டை கோழிகள் திருட்டு; சிறுவன் உட்பட 3 பேர் கைது
/
சண்டை கோழிகள் திருட்டு; சிறுவன் உட்பட 3 பேர் கைது
ADDED : செப் 01, 2024 11:15 PM

வானுார் : கிளியனுார் அருகே சண்டைக் கோழிகளைத் திருடிய சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிளியனுார் அடுத்த ஆதனப்பட்டு புது காலனியைச் சேர்ந்தவர் கண்ணபிரான், 45; இவர் தனது வீட்டில் சண்டை கோழிகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு, கண்ணபிரான் வீட்டில் இருந்த சண்டைக் கோழிகளை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு வெளியே வந்தனர்.
சத்தம் கேட்டு எழுந்து வந்த கண்ணபிரான் அப்பகுதி மக்கள் உதவியுடன் 3 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கிளியனுார் போலீசார் 3 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர்.
அவர்கள், சென்னை, நமச்சிவாயபுரம்ரத்தினம் மகன் ஹரிஷ்குமார், 18; சாகுல்அமீது மகன் கசர், 21; மற்றும் ஆதனப்பட்டு புதுகாலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.