/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆட்டோவில் இருந்து விழுந்தவர் பலி
/
ஆட்டோவில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : செப் 01, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : மரக்காணம் அருகே ஆட்டோவில் வந்தவர் கீழே விழுந்து இறந்தார்.
மரக்காணம் அடுத்த அசப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 50; இவர் நேற்று காலை 10:00 மணிக்கு கீழ்புத்துப்பட்டில் இருந்து ஆட்டோவில் மரக்காணத்திற்கு இ.சி.ஆர்., வழியாக வந்தார். கூனிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டர்.
அப்பொழுது பின்னால் அமர்ந்து வந்த கணேசன் கீழே விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.