நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் புதுகாலனி பகுதியை சேர்ந்த கோதண்டம் மகன் அதியமான், 31; கூலி தொழிலாளி. இவருக்கு மகாலட்சுமி,28; என்பவருடன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 12ம் தேதி சென்னைக்கு வேலைக்குச் சென்றவர் காணாமல் போனார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் அவரது மனைவி புகாரளித்தார்.
இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.