ADDED : ஜூன் 19, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார், நேற்று எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த மினி டாரஸ் லாரியை நிறுத்தினர். அப்போது போலீசை பார்த்ததும் ஒருவர் தப்பியோடினார்.
பிடிபட்ட நபரிடம் விசாரித்ததில், நத்தமேடு சேட்டு மகன் குமரேசன், 30; என தெரிந்தது. உடன் அவரை கைது செய்து, தப்பியோடிய பிடாகம் ஜெயப்பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.