/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசாரி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை
/
ஆசாரி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை
ADDED : மே 03, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆசாரி வீட்டில் பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், வழுதரெட்டி, ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தஜோதி, 60; ஆசாரி.
இவரது, வீட்டு படிக்கெட்டின் கீழிருந்த ஆசாரி வேலைக்கு பயன்படுத்தும் டிரில்லிங் மெஷின், கட்டிங் மெஷின், 15 மீட்டர் ஒயரை கடந்த 27 ம் தேதி காணவில்லை.
திருடு போன பொருட்களின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.