/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துளுக்காத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
துளுக்காத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : மே 03, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அடுத்த பூத்துறை துளுக்காத்தம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இக்கோவில் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 30ம் தேதி பற்பகல் 3:00 மணிக்கு செடல் திருவிழா நடந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காத்தவராயன் - கருப்பழகி சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதனையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.