ADDED : செப் 13, 2024 07:21 AM
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிற் சங்கங்கள் சார்பில் மண்டல அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எம்.எல்.எப்., மாநில செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். தொழிற் சங்க நிர்வாகிகள் குணசேகரன், லோகநாதன், தெய்வீகன், முருகன், சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டியூ., மண்டல தலைவர் ராஜாராம், பணியாளர் சம்மேளன மண்டல தலைவர் துரைராஜ் வரவேற்றனர்.
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஓய்வுபெறும் நாளன்று, பணப் பலன்களை வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வுடன் ஓய்வூதியத்தை முறைப்படுத்தி, அனைவருக்கும் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சம்மேளன மாநில இணை பொதுச்செயலாளர் நாகராஜன், தொழிற் சங்க நிர்வாகிகள் ரவி, ரகோத்தமன், மூர்த்தி,ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சி.ஐ.டியூ., மண்டல துணை பொதுச்செயலாளர் ஏழுமலை நன்றி கூறினார்.