sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்டையில் விழுந்து தாயும், மகனும் பலி மேல்மலையனுார் அருகே சோகம்

/

குட்டையில் விழுந்து தாயும், மகனும் பலி மேல்மலையனுார் அருகே சோகம்

குட்டையில் விழுந்து தாயும், மகனும் பலி மேல்மலையனுார் அருகே சோகம்

குட்டையில் விழுந்து தாயும், மகனும் பலி மேல்மலையனுார் அருகே சோகம்


ADDED : ஆக 17, 2024 03:36 AM

Google News

ADDED : ஆக 17, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை,: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த செவலபுரை கிராமத்தில் வராக நதியோரம் அய்யனாரப்பன் கோவில் உள்ளது.

கோவிலுக்கு அருகே உள்ள குட்டையில் நேற்று காலை 8.00 மணியளவில், ஆண் மற்றும் பெண்ணின் உடல் மிதப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் வளத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அளித்த தகவலின் பேரில் மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் குட்டையில் அழுகிய நிலையில் இருந்த இரண்டு உடல்களை மீட்டனர். பின் வளத்தி போலீசார் இரண்டு பிரேதங்களையும் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூரு, எலகங்கா பகுதியை சேர்ந்த சண்முகம் மனைவி தேவி, 40; இவரது மகன் ராகுல், 13; என தெரியவந்தது.

இவர்கள் இருவரும் கடந்த 11 ம்தேதி, செவலபுரையில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் நடந்த விழாவிற்கு பெங்களூருவிலிருந்து வந்துள்ளனர். செவலபுரையிலுள்ள தேவியின் அக்கா வீட்டிற்கும் செல்லாமல் இருவரும் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது குட்டை நீரில் இறங்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும், ஒருவரை காப்பாற்ற முயன்ற போது, மற்றொருவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இறந்த தேவியின் கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us