/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
/
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
UPDATED : மார் 22, 2024 12:00 PM
ADDED : மார் 22, 2024 12:00 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில்ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தாசில்தார் யுவராஜ் , சமூக நல தனி தாசில்தார் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன் வரவேற்றார்.
ஓட்டுச்சாவடிகளில் நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பயிற்சி அளிக்கப்பட்டது.
மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வட்ட வழங்கல் அலுவலர் விமல் ராஜ், தேர்தல் உதவியாளர் ஜெகதீஷ்,வருவாய் அலுவலர்கள், தொகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், அனைத்து வி.ஏ.ஓ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

