ADDED : செப் 04, 2024 03:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி,: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார், அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, அன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க காப்பு அலங்காரமும் நடந்தது.
இரவு 11:00 மணிக்கு பார்வதி பால விநாயகர் அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களைப் பாடி ஊஞ்சல் உற்சவத்தை நடத்தினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் பாடல்களை பாடி கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.