ADDED : மார் 04, 2025 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் நிழற்குடையில், அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்த 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், நேற்று இறந்து கிடந்தார். தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார், அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.