ADDED : மார் 08, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் அடையாளம் தெரியாத நபர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பஸ் நிறுத்த நிழற்குடையில், நேற்று காலை 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அடையாளம் தெரியாத அவர், அந்த பகுதியில் யாசகம் எடுத்து வந்து, உடல் நிலை பாதித்து இறந்துள்ளார்.
இது குறித்து, டவுன் வி.ஏ.ஓ., பத்மாவதி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.