/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம்
/
கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம்
ADDED : ஆக 28, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி, சிறுகடம்பூரில் உள்ள ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது.
அதனை முன்னிட்டு ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் மற்றும் ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஊர்வலமும், தொடர்ந்து கோவில் முன் உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் நடந்தது.
நிகழ்ச்சியில், அமைச்சர் மஸ்தான், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் மற்றும் கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.