sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

/

பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது


ADDED : ஆக 18, 2024 04:14 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : திண்டிவனம் அருகே பட்டா மாறுதலுக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த ஆலகிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், 40; கட்டளை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், 43; இவர், தனது தந்தை பெயரில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தினை தன் பெயரில் பட்டா மாறுதல் செய்ய வி.ஏ.ஓ., லட்சுமணனை அணுகினார்.

அவர், 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பட்டா மாறுதலுக்கு கையெழுத்து போடுவேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து யுவராஜ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து நேற்று போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாயை யுவராஜ் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமணனிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லட்சுமணனை லஞ்சப் பணத்துடன் பிடித்து கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us