/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா
/
பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா
ADDED : மே 13, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வளவனுார் அக்ரஹாரம் வேதவள்ளி நாயகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கும், உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து மூலவர் பெருமாளுக்கு, அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில், வேதவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவில் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.