ADDED : மார் 03, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றிய வி.சி., கட்சி செயற்குழு கூட்டம் வளத்தியில் நடந்தது.
கூட்டத்திற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் தனஞ்செழியன், கட்சி வளர்ச்சி பணிகளுக்கான ஆலோசனை வழங்கி பேசினார். விழுப்புரத்தில் 16ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு 50 வாகனங்களில் செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநில துணைச் செயலாளர்கள் துரைவளவன், இனியவளவன், மாவட்ட அமைப்பாளர் அரசு உட்பட பலர் பங்கேற்றனர்.