sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆயுதப்படை போலீஸ் குவிப்பு

/

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆயுதப்படை போலீஸ் குவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆயுதப்படை போலீஸ் குவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆயுதப்படை போலீஸ் குவிப்பு


ADDED : ஜூலை 02, 2024 11:30 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமைச்சர்கள், கட்சியினர் என திரண்டுள்ளதால், ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. தேர்தலில் தி.மு.க., - பா.ம.க., இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் தி.மு.க., தரப்பில் தற்போது 15 அமைச்சர்கள், 30க்கும் மேற்பட்ட எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், கட்சியினர் பலர் விக்கிரவாண்டியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல், பா.ம.க., தரப்பில் அன்புமணி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளும் திரளாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே, பிரசாரம் மேற்கொள்வதில் கிராமப்புறங்களில் கடந்த சில தினங்களாக மோதலும் ஏற்பட்டு வருகிறது. இதனால், பாதுகாப்புக்காக போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கையாக முதல்கட்டமாக 200 ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உளுந்துார்பேட்டை பட்டாலியன் மற்றும் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த 3 பட்டாலியன் போலீசார் என மொத்தம் 200 போலீசார் நேற்று மாலை விழுப்புரம் வந்தனர். இவர்கள், விக்கிரவாண்டி தொகுதிக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us