sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு

/

அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு

அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு

அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு


ADDED : செப் 05, 2024 05:35 AM

Google News

ADDED : செப் 05, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மேல்மலையனுார், வளத்தி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

மேல்மலையனுார் ஊராட்சியில், பிரதம மந்திரி ஜன்மந்த் திட்டத்தின் கீழ், தலா ரூ.5.07 லட்சம் மதிப்பீட்டில் 12 வீடுகள் கட்டப்படுவதை, கலெக்டர் பழனி பார்வையிட்டு, கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணியை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு, அறிவுறுத்தினார்.

இதையடுத்து, வளத்தி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.53 லட்சம் மதிப்பீட்டில் பயனாளி வீடு கட்டுவதை, ஆய்வு செய்தார். தொடர்ந்து, வளத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய வட்டார பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்டப்பட்டுள்ளதை, கலெக்டர் ஆய்வு செய்தார்.

இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, பார்வையிட்ட கலெக்டர் சிகிச்சை பெறுவோரிடம், இங்குள்ள சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தார். டாக்டர்கள், செவிலியர்கள் வருகை பதிவேடு, இருப்பு பதிவேடு, உள்நோயாளிகள், புறநோயாளிகள் வருகை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின், கலெக்டர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். பி.டி.ஓ.,க்கள் சையத் முகமத், சிவ சண்முகம் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us