நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் கண் கொடுத்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடந்தது.
அதனையொட்டி, காலை 10:00 மணிக்கு உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும் சிறப்பு வழிபாடும் நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. கண்டாச்சிபுரம், அங்குராயநத்தம், மடவிளாகம் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.