/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் விதிமுறை மீறல் பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு
/
தேர்தல் விதிமுறை மீறல் பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு
தேர்தல் விதிமுறை மீறல் பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு
தேர்தல் விதிமுறை மீறல் பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு
ADDED : ஜூன் 30, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணையில் தேர்தல் விதிமுறை மீறி கொடிகளை வைத்ததாக பா.ம.க., கிளைச் செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
காணை இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது சாலையின் இரு புறங்களிலும் தேர்தல் விதிமுறை மீறி பா.ம.க., கொடி கம்பங்களை நட்டு வைத்திருந்தது தெரியவந்தது.
கொடிகளை வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த பா.ம.க., கிளைச் செயலாளர் குழந்தைவேலு மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.