/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஆர்.பி., பள்ளியில் பாட்டு போட்டி
/
வி.ஆர்.பி., பள்ளியில் பாட்டு போட்டி
ADDED : ஜூலை 30, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில் கோல்டன் மைக் சார்பில் பாட்டு போட்டி நடைபெற்றது.
இதில், 5 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் கர்நாடக இசை, திரை இசைப்பாடல்களை பாடினர். பாடல் பாடிய மாணவர்களை  நான்கு பிரிவுகள் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவுக்கு மூன்று பரிசுகள், கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
போட்டியாளர்களை, நடுவர்கள் மஞ்சு கண்ணன், ரூபன், கார்த்திக், ஹரிணி ஆகியோர் தேர்வு செய்தனர். சிறந்த பாடல் பாடியோருக்கு, அஷ்ரப் அலி பரிசளித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாகிகள் மகா கணேஷ், விஷால் ஆகியோர் செய்தனர்.

