sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் மிதந்தது மலம் அல்ல : கலெக்டர் விளக்கம்

/

விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் மிதந்தது மலம் அல்ல : கலெக்டர் விளக்கம்

விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் மிதந்தது மலம் அல்ல : கலெக்டர் விளக்கம்

விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் மிதந்தது மலம் அல்ல : கலெக்டர் விளக்கம்

1


ADDED : மே 16, 2024 02:51 AM

Google News

ADDED : மே 16, 2024 02:51 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் கிடந்தது மலம் அல்ல, தேன் அடை என கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த கஞ்சனுார் ஊராட்சியை சேர்ந்த கே.ஆர். பாளையம் கிராம மக்களுக்கு, அப்பகுதியில் உள்ள திறந்தவெளி கிணற்றில் இருந்து மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் ஏற்றி குடிநீர் வழங்கப்படுகிறது. நேற்று காலை 7:00 மணிக்கு தண்ணீர் திறந்துவிட சென்ற டேங்க் ஆபரேட்டர் கன்னியப்பன், கிணற்று நீரில் மலம் கலந்துள்ளதாக கூறியதால் கிராமத்தில் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஆர்.டி.ஓ., ஷாகுல் ஹமீது, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விக்னேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கிராமத்திற்கு சென்று கிணற்றை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

ஆய்வில் கிணற்றில் மிதந்தது தேனடை என்பதை அதிகாரிகள் உறுதி செய்து அதனை எடுத்து காண்பித்ததால், கிராம மக்கள் சமாதானம் அடைந்தனர். தொடர்ந்து, கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்து சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

இது குறித்து கலெக்டர் பழனி கூறுகையில், 'கே.ஆர்.பாளையம் கிராமத்தில் உள்ள திறந்தவெளி குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக புகார் வந்ததும், கூடுதல் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சென்று, ஆய்வு செய்தனர். கிணற்றில் கிடந்த தேன் அடையை கிராம மக்கள் முன்னிலையில் எடுத்து காட்டி உறுதிப்படுத்தினர். கிணற்று நீரை, குடிநீர் வடிகால் வாரிய குழுவினர் பரிசோதித்து, தரமான, பாதுகாப்பான குடிநீர் என்பதை உறுதி செய்தனர்' என்றார்.






      Dinamalar
      Follow us