sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திண்டிவனம் நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்படுவாரா?

/

திண்டிவனம் நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்படுவாரா?

திண்டிவனம் நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்படுவாரா?

திண்டிவனம் நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்படுவாரா?


ADDED : ஜூலை 02, 2024 05:58 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனத்திற்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்படாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வி கடந்த மாதம் 12 ம் தேதி, விருதுநகர் நகராட்சி ஆணையாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதே போல் திருப்பத்துார் நகராட்சியில் பணியாற்றி வந்த சத்தீஷ்குமார், திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் சத்தீஷ்குமார், வாணியாம்பாடி நகராட்சி ஆணையாளராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் திண்டிவனம் நகராட்சிக்கு புதிய ஆணையாளர் வேறு யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இதை தொடர்ந்து விழுப்புரம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வரும் ரமேஷ், திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக கூடுதல் பொறுப்பு வகித்து, பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நிரந்தர ஆணையாளர் இல்லாததால் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் நகராட்சிக்கு நிரந்தரமாக புதிய ஆணையாளரை நியமிப்பதற்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us