sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு கூரை அமைக்கப்படுமா?

/

செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு கூரை அமைக்கப்படுமா?

செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு கூரை அமைக்கப்படுமா?

செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு கூரை அமைக்கப்படுமா?


ADDED : மே 10, 2024 11:24 PM

Google News

ADDED : மே 10, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி:விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள மார்க்கெட் கமிட்டிக்கு, தமிழகத்திலேயே அதிக அளவில் நெல் வரத்து உள்ளது. தென் மாவட்ட வியாபாரிகள் இங்கு அதிகளவில் நெல் கொள்முதல் செய்வதால் கூடுதல் விலை கிடைக்கிறது. இதனால், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சுற்று வட்டார மாவட்ட விவசாயிகளும் இங்கு நெல் கொண்டு வருகின்றனர்.

அதற்கேற்ப மார்க்கெட் கமிட்டியில் இடவசதி இல்லாததால், திறந்தவெளி களத்தில் ஏலம் நடத்துகின்றனர்.

இந்நிலையில், 8ம் தேதி பெய்த திடீர்மழையில், ஏலத்திற்காக வைத்திருந்த விவசாயிகளின் 4,000 நெல் மூட்டைகளும், வியாபாரிகளின் 2,000 நெல் மூட்டைகளும் நனைந்ததால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.

எனவே, செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் ஏலக் கூடங்களுக்கு மேற்கூரை அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர தீர்வு காண மார்க்கெட் கமிட்டியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

மார்க்கெட் கமிட்டிக்கு கிழக்கில் 2 ஏக்கர் அளவிற்கு அறநிலையத்துறையின் இடத்தை குத்தகைக்கு பெற்றும், தெற்கில் 2 ஏக்கர் அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றியும் மார்க்கெட் கமிட்டியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us