ADDED : மே 19, 2024 04:23 AM
விழுப்புரம், : விழுப்புரம் அருகே மீன்பிடிக்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த தென்னமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் முருகராஜ், 36; விவசாய கூலி தொழிலாளி. இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வீட்டிலிருந்து மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், அவர் தென்னமாதேவி கிராம ஐயனார் கோவில் குளத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார், இறந்து கிடந்த முருகராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முருகராஜிக்கு நீச்சல் தெரியாமல் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் குறிப்பிட்டனர். அவருக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

