நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வயிற்று வலியால் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த திருப்பச்சாவடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் சிவராமன், 35; பெயிண்டர். திருமணமாகவில்லை. சில நாட்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதால், மனமுடைந்த அவர், வேட்டியால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.