ADDED : ஏப் 17, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வேலைக்கு சென்ற தங்கையை காணவில்லை என சகோதரர் போலீசில் புகார் செய்துள்ளார்.
வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மகாவீரபுரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுகேது மகள் வினோதினி, 23; பி.காம்., பட்டதாரி. இவர் கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். பின் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் வினோதினி கிடைக்கவில்லை.
இது குறித்து வினோதினியின் சகோதரர் வினோத் புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து வினோதினியை தேடி வருகின்றனர்.

