ADDED : மே 05, 2024 05:59 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் காரில் வந்த பெண்ணையும், அவரின் பிள்ளைகளை தாக்கிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் கே.வி.ஆர்., நகரை சேர்ந்தவர் குமாரவேல் மனைவி தேவகி,54; இவரும், இவரின் மகன் சித்தார்த்தன்,33; மகள் யாழினி,24; ஆகியோர் கடந்த 29ம் தேதி காரில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்தனர்.
இவர்களின் முன்னால் இரு மோட்டார் சைக்கிள்களில் விழுப்புரம் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் சஞ்சய்,20; ஸ்ரீதேவி, நவீன், விமல் ஆகியோர் கரும்பு சக்கையை தின்று வீசியபடி சென்றனர். விழுப்புரத்தில் உள்ள புதுச்சேரி சாலையில் வந்த போது, காரை நிறுத்தி, மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களிடம் கரும்பு சக்கையை வீசியது பற்றி தேவகி மற்றும் பிள்ளைகள் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் உட்பட 4 பேரும் சேர்ந்து, தேவகி மற்றும் அவரின் பிள்ளைகளை திட்டி, தாக்கியுள்ளனர். விழுப்புரம் டவுன் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து, சஞ்சயை கைது செய்தனர்.