/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது
/
குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது
ADDED : செப் 01, 2024 03:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே குட்கா பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை தீவனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் நடத்திய சோதனையில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடன், அதே பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் மணிகண்டன், 34; என்பவரை கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.