/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே தளவாட பொருள் திருடிய வாலிபர் கைது
/
ரயில்வே தளவாட பொருள் திருடிய வாலிபர் கைது
ADDED : ஜூன் 09, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் ரயில்வே தளவாட பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அருகே கிடங்கல் 2 பகுதியை சேர்ந்தவர் சாம், 20; இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், மதுபோதையில் திண்டிவனத்தில் ரயில் பயணிகளிடம் மொபைல் போனை பறித்ததோடு, ரயில்வே இரும்பு தளவாட பொருட்களை திருடியுள்ளார்.
திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப் பதிந்து சாமை கைது செய்தனர்.