ADDED : ஜூன் 09, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.
திண்டிவனம் அடுத்த வடஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் விஜயரங்கன், 27; திருமணமாகாதவர். புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது, புதிய வீட்டின் பாத்ரூமில் ஒயரிங் வேலை நடந்து வந்தது.
நேற்று மாலை 4:00 மணியவில், விஜயரங்கன் ஸ்விட்ச் போர்டில் இணைக்கப்பட்டிருந்த டிரில்லிங் மிஷினில் இருந்த மின்சார ஒயரை கையில் சுற்றிய போது, மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார்.
உடன், அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே, விஜயரங்கன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.