ADDED : அக் 24, 2025 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடுங்குளிரில் அவதிப்பட்ட 100 வயது மூதாட்டி இறந்தார்.
மேலமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாலுசாமி மனைவி பார்வதி, 100; இவர், தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட குளிரில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலை இறந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

