sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியது தமிழ் பாடத்தில் 364 பேர் 'ஆப்சென்ட்'

/

10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியது தமிழ் பாடத்தில் 364 பேர் 'ஆப்சென்ட்'

10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியது தமிழ் பாடத்தில் 364 பேர் 'ஆப்சென்ட்'

10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியது தமிழ் பாடத்தில் 364 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 29, 2025 04:50 AM

Google News

ADDED : மார் 29, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று தொடங்கிய 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 23 ஆயிரத்து 743 மாணவ, மாணவியர்கள் எழுதினர்.

விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.

திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 58 மையங்களும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 68 தேர்வு மையங்கள் என மொத்தம் 126 தேர்வு மையங்களில், 362 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 828 மாணவர்களும், 12 ஆயிரத்து 279 மாணவிகள் என 24 ஆயிரத்து 107 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

நேற்று காலை 10:00 மணிக்கு தமிழ் பாட தேர்வுடன் பொதுத் தேர்வு தொடங்கியது. அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்வு பணியில் 128 முதன்மை தேர்வு கண்காணிப்பாளர்கள், 176 பறக்கும் படை குழுவினர், 1,970 அறை கண்காணிப்பாளர்கள், சொல்வதை எழுதும் ஆசிரியர்கள் 535 பேர், அலுவலக பணியாளர்கள் 250 உள்ளிட்ட 3240 பேர் ஈடுபட்டனர். 535 மாற்றுத்திறன் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வு மையங்களை, தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குனர் குழந்தைராஜன், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் சேகர் மற்றும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் குழுவினர், திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 176 பறக்கும் படையினரும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

முதல் நாள் தேர்வான தமிழ் பாட தேர்வில் 23 ஆயிரத்து 743 பேர் எழுதினர். 364 மாணவ, மாணவியர்கள் ஆப்சென்ட் ஆகினர்.






      Dinamalar
      Follow us