sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாவட்டத்தில் 712 நியமன கவுன்சிலர் பதவிக்கு 1,302 மனுக்கள்! மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் விண்ணப்பம்

/

மாவட்டத்தில் 712 நியமன கவுன்சிலர் பதவிக்கு 1,302 மனுக்கள்! மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் விண்ணப்பம்

மாவட்டத்தில் 712 நியமன கவுன்சிலர் பதவிக்கு 1,302 மனுக்கள்! மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் விண்ணப்பம்

மாவட்டத்தில் 712 நியமன கவுன்சிலர் பதவிக்கு 1,302 மனுக்கள்! மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் விண்ணப்பம்


ADDED : ஆக 06, 2025 01:02 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின்படி, 712 நியமன கவுன்சிலர் பதவிக்கான விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில், 1,302 பேர் ஆர்வத்துடன் மனு செய்துள்ளனர். தமிழகத்தில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், தலா ஒரு தகுதியான மாற்றுத்திறனாளி நபருக்கு, நியமன கவுன்சிலர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் 13 ஆயிரத்து 988 பதவிகள் நியமனம் வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் நியமன பதவிகளுக்கு கடந்த, ஜூலை 1ம் தேதி துவங்கி, 17ம் தேதி வரை மனு தாக்கல் செய்யவும், கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 31ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில், ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 13 ஒன்றிய கவுன்சிலர்கள், 688 ஊராட்சி உறுப்பினர்கள், 3 நகராட்சி கவுன்சிலர்கள், 7 பேரூராட்சி கவுன்சிலர்கள் என, 712 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

முகையூர் ஒன்றியம் (48 ஊராட்சிகள்), திருவெண்ணெய்நல்லுார் (50), காணை (50), கோலியனுார் (42), கண்டமங்கலம் (46), விக்கிரவாண்டி (51), ஒலக்கூர் (52), மயிலம் (47), மரக்காணம் (56), வானுார் (65), செஞ்சி (60), வல்லம் (66), மேல்மலையனுார் (55) ஆகிய ஒன்றியங்களில் உள்ள 688 ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு, 1,123 பேரும், 13 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 121 பேரும், ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 15 பேரும் மனு கொடுத்துள்ளனர்.

இதேபோல், விழுப்புரம் நகராட்சியில் 8 பேரும், திண்டிவனம் நகராட்சியில் 13 பேரும், கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

செஞ்சி பேரூராட்சியில் 2 பேரும், அனந்தபுரம் பேரூராட்சியில் 2 பேரும், விக்கிரவாண்டி பேரூராட்சியில் 3 பேரும், மரக்காணம் பேரூராட்சியில் 3 பேரும், வளவனுார் பேரூராட்சியில் 7 பேரும், அரகண்டநல்லுார் பேரூராட்சியில் 3 பேரும், திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சியில் ஒருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 712 நியமன கவுன்சிலர் பதவிக்கு, மொத்தம் ஆயிரத்து 302 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி, கவுன்சிலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.






      Dinamalar
      Follow us