/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தலைமை ஆசிரியர் வீட்டில் 17 சவரன் நகை திருட்டு
/
தலைமை ஆசிரியர் வீட்டில் 17 சவரன் நகை திருட்டு
ADDED : ஆக 28, 2025 02:48 AM

விழுப்புரம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 17  சவரன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை, செல்வா நகரை சேர்ந்தவர் தாஸ்,53; நரசிங்கனுார் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்.  இவரது மனைவி குளோரி, விழுப்புரம் பி.என்., தோப்பு நகராட்சி மேல்நிலை  பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இருவரும் நேற்று முன் தினம் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டு மாலை 6:00 மணிக்கு வீடு திரும்பினர். நேற்று காலை 8:00 மணிக்கு குளோரி பீரோவில் இ ருந்த நகையை பார்த்தபோத, 17 சவரன் நகை காணாமல் போனது தெரிந்தது.
தகவலறிந்த, விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின், அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
போலீசார் விசாரணையில், மர்ம நபர்கள், தாஸ் மற்றும் அவர் மனைவி பணிக்கு செல்வதை நோட்டமிட்டு வந்துள்ளதாகவும், அவர்கள் வீட்டின் உள்புறமாக செல்லும் மாடியின் கதவு வழியாக உள்ளே நுழைந்து, பீரோவின் மேற்புரத்தில் வைக்கப்பட்டிருந்த சாவியால் திறந்து நகையை திருடிசென்றது தெரியவந்தது.
தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

